கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து - 3 பேர் பலி

கோவையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர்

Update: 2018-08-04 12:49 GMT
கோவையில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், 3 பேர் உயிரிழந்தனர். கோவை பைபாஸ் சாலையில் இந்த விபத்து நடந்தது. இதில் 2 கார்களிலும் பயணம் செய்த 6 பேர் காயமடைந்தனர். 

மேலும் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வெற்றிவேல் என்பவரின் மீதும் கார்கள் மோதியதால் அவர் படுகாயமடைந்தார். இவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்