வீட்டின் மீது கல்விசி தாக்கிய கும்பல் - தனியார் நிதி நிறுவனர் செய்த பயங்கரம்..கரூரில் பட்டப்பகலில்..

Update: 2024-04-28 09:21 GMT

கரூரில், பட்டப்பகலில் 10 பேர் கொண்ட கும்பல் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

காந்திகிராமம் பகுதியை சேர்ந்த மனோகரன் என்பவர், வீட்டை அடமானம் வைத்து, 23 லட்சம் ரூபாய் பணத்தை தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். மனோகரன் முறையாக வட்டி செலுத்தி வந்த நிலையில், திடீரென பத்திரப்பதிவில் மோசடி செய்து, நிதி நிறுவன அதிபர் ரகுநாதன் என்பவர் வீட்டை கையகப்படுத்த முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், பயங்கர ஆயுதங்களுடன் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல், மனோகரன் வீட்டின் முன்பு கல் வீசி தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்