நீட் தேர்வு: மாணவர்களுக்கு நீதி தேவை - ராமதாஸ்

நீட் தேர்வு விவகாரத்தில் தவறிழைத்தது எந்த அரசாக இருந்தாலும் தமிழக மாணவர்களுக்கு நீதி வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-07-20 11:24 GMT
நீட் தேர்வு வினாக்கள் தமிழில் தவறாக கேட்கப்பட்டதற்கு காரணம் யார் என்பது தற்போது விவாதப் பொருள் அல்ல என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ராமதாஸ், பாதிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க சிபிஎஸ்இ உச்சநீதிமன்றத்தில் உறுதி அளித்து, இந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்