மாணவி லோகேஸ்வரி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

ஆலோசனைக்கு பின் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Update: 2018-07-13 15:16 GMT
பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவி சம்பவம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டார்.  இதில், உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அத்துறையின் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

கல்லூரி வளாகங்களில் நடைபெற வேண்டிய நிகழ்ச்சிகள், அவற்றுக்கு பெற வேண்டிய வழிமுறைகள் பற்றி முடிவெடுக்க ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இதனிடையே உயிரிழந்த மாணவி குடும்பத்திற்கு 5 லட்ச 
ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்