தமிழகத்தில் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

தமிழகம் முழுவதும் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அளவீடு செய்து எல்லைகளை வரையறை செய்ய கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-12 13:57 GMT
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க, தமிழ்நாடு ஏரிகள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றல் சட்டம் கடந்த 2007ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஏரிகளை  அளவீடு செய்து, அது சம்பந்தமான பதிவேடுகளை தயாரிக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் 10 ஆண்டாகியும் இந்த சட்டம் அமல்படுத்தப்படவில்லை எனவும்,  ஏரிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற, அரசுக்கு உத்தரவிடக்கோரி  நாராயணன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் உள்ள 39 ஆயிரத்து 202 ஏரிகளில், பெரும்பாலானவற்றில் அளவீடு செய்யவில்லை என்றும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை என அரசு கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ளது என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஆகஸ்ட் 16-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு  உத்தரவிட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்