ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய வருண் : ரூ.8.4 கோடிக்கு ஏலம் எடுத்த பஞ்சாப் அணி

ஐ.பி.எல். ஏலத்தில் 8 கோடியே 40 லட்சம் ரூபாய் அளவிற்கு ஏலம் போன தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி குறித்து தற்போது காணலாம்...

Update: 2018-12-19 06:07 GMT
தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி.. ஒரே நாளில் கோடீஸ்வரராக மாறிய கிரிக்கெட் வீரர் 20 லட்சம் ரூபாய் அடிப்படை விலை கொண்டு ஏலம் தொடங்கப்பட்டது. ஆனால், இவரை வாங்க சென்னை உள்ளிட்ட பல்வேறு அணிகள் கடும் போட்டி போட்டது. இறுதியாக பஞ்சாப் அணி 8 கோடியே 40 லட்சம் ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது.தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மதுரை அணிக்காக வருண் சக்கரவர்த்தி விளையாடினார். 

சுழற்பந்துவீச்சாளரான இவர், மதுரை அணியின் வெற்றிக்காக மிகப் பெரிய பங்கு ஆற்றியவர்.நடப்பு சீசன் விஜய் ஹசாரே தொடரில் வருண சக்கரவர்த்தி 22 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியவர். கிரிக்கெட் வீராக இருந்த போதே வருண் சககரவர்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வலைப் பயிற்சியின் போது பந்துவீசியுள்ளார். அஸ்வின் போலேவே உயரம் கொண்ட வருண் சக்கரவர்த்தி, அஸ்வின் தொட்ட உயரத்தை தொடுவார் என எதிர்பார்க்கலாம்.. 
Tags:    

மேலும் செய்திகள்