கரூரில் இறங்கி அடிக்கும் பாஜக வேட்பாளர்

Update: 2024-04-17 10:17 GMT

கரூர் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் செந்தில்நாதன், தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். திறந்த வேனில் நின்றபடி ஊர் ஊராக சென்று பிரசாரம் மேற்கொண்டார். அவரது வாகனத்திற்கு முன்னும், பின்னும் பாஜகவினர் இரு சக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர். ராயனூரில் தொடங்கிய பிரச்சார பேரணியானது தாந்தோணிமலை, சுங்ககேட், பசுபதிபாளையம் வழியாக, திருக்காம்புலியூர் பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் நிறைவடைந்தது. 

Tags:    

மேலும் செய்திகள்