பிரதமர் சொன்ன ஒரு வார்த்தை - கொதித்தெழுந்து பிரியங்கா காந்தி கொடுத்த பதிலடி

Update: 2024-04-24 01:58 GMT

நாட்டிற்காக தனது தாய் சோனியா காந்தி தாலியை தியாகம் செய்துள்ளதாக, பிரதமர் மோடியின் பேச்சுக்கு பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் உள்ள பெண்களின் தாலி உட்பட அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்து அதை மறுபங்கீடு செய்யும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரியங்கா காந்தி, சில சமயங்களில் பிரதமர் மோடி ம‌த‌த்தை வைத்து அரசியல் செய்வதாகவும், தன்னை தவறாக பேசுவதாகவும் கூறி வருவதாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி பொதுமக்களின் தாலி மற்றும் தங்கத்தை அபகரிக்க நினைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருப்பதாக சுட்டிக்காட்டிய பிரியங்கா காந்தி, 75 ஆண்டு சுதந்திர இந்தியாவில், 55 ஆண்டுகள் ஆட்சி செய்த கங்கிரஸ் யாருடைய தங்கத்தையாவது திருடியுள்ளதா என்று கேள்வி எழுப்பினார். போரின் போது இந்திரா காந்தி நாட்டுக்காக தங்கத்தை தானமாக கொடுத்த‌தாகவும், தனது தாய் சோனியா காந்தி தாலியையே தியாகம் செய்த‌தாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்