"பாஜகவுக்கு வாக்களிப்போர் பெயர்கள் நீக்கம்" - வினோஜ் பி செல்வம் பரபரப்பு பேச்சு

Update: 2024-04-26 13:17 GMT

சென்னை தேனாம்பேட்டை சிக்னல் அருகே பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். முன்னதாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் உரிய அனுமதி இல்லாமல் இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக கூறி மாநகராட்சி அலுவலர்கள் காவல்துறையினரின் உதவியோடு பாஜக கொடிகளை அகற்ற முயற்சி செய்தனர். தொடர்ந்து பாஜக தரப்பில் தேர்தல் அலுவலரை சந்தித்து அனுமதி பெற பாஜகவினர் சென்ற நிலையில் கொடிகளை அகற்றுவது நிறுத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வினோஜ் பி செல்வம் , பாஜகவுக்கு யாரெல்லாம் வாக்களிப்பார்களோ அவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்