கொரோனா தடுப்பூசி வழங்கல்...மத்திய அரசு மிகப்பெரிய தோல்வி - ப.சிதம்பரம்

கொரோனா தடுப்பூசி வழங்கல்...மத்திய அரசு மிகப்பெரிய தோல்வி - ப.சிதம்பரம்

Update: 2021-04-12 05:28 GMT
கொரோனா தடுப்பூசி வழங்கல்...மத்திய அரசு மிகப்பெரிய தோல்வி - ப.சிதம்பரம் 

மத்திய அரசு கொரோனா தடுப்பூசி வழங்கலில் சந்தித்திருக்கும் மிகப்பெரிய தோல்வியை மறைக்க முயற்சித்து வருகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார்.இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஒருநாள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி திருவிழா எனக் கூறும் மத்திய அரசு, மற்றொரு நாள் கொரோனாவுக்கு எதிரான 2 ஆவது போர் என்கிறது, இதில் எதை எடுத்துக் கொள்வது எனக் கேள்வியை எழுப்பியுள்ளார். மேலும் பிரதமர் மோடி முதல் ஊரடங்கை அறிவித்த போது மகாபாரத போருடன் ஒப்பிட்டு, கொரோனாவுக்கு எதிரான போரில் 21 நாட்களில் வெல்வோம் எனக் கூறியிருந்தார், ஆனால் நடந்தது என்ன? என்றும் சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். வெற்று பேச்சு மற்றும் பெருமையால் கொரோனாவுக்கு எதிராக வெற்றிக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்