காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தர்ணா... வலுக்கட்டாயமாக கைது செய்த போலீஸ்

கரூரில் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.

Update: 2021-02-20 07:47 GMT
கரூரில் அனுமதியின்றி தர்ணாவில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். லைட் ஹவுஸ் கார்னரில் 70 ஆண்டுகளுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி அமைத்த காந்தி சிலையை அகற்றி புதிய சிலையை வைத்ததை கண்டித்து ஏராளமான காங்கிரஸார் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி போலீசார் அறிவுறுத்தினர். எனினும் போராட்டம் நீடித்ததால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்