முதலமைச்சர் தொடர்ந்த அவதூறு வழக்கு - பிப். 25 நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு சம்மன்

முதலமைச்சர் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில், வரும் 25 ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Update: 2021-02-16 03:49 GMT
கடந்த டிசம்பர் மாதம் சென்னை கொளத்தூரில்  நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. ஸ்டாலினின் கருத்து முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக கூறி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  பின்னர் அந்த வழக்கு சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் முதலாவது சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் வரும்  25ம் நேரில் ஆஜராகும்படி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்