"கலப்படத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்" - மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தல்

உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் கூறினார்.

Update: 2019-11-20 08:53 GMT
உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் கூறினார். உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது அதிகரித்துள்ள நிலையில், உணவு பொருள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் எடுப்பது குறைவாக உள்ளதாக குறிப்பிட்டார். மக்களின் சுகாதாரம் தொடர்பான நடவடிக்கைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஏ.கே. செல்வராஜ் வலியுறுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்