ப.சிதம்பரம் வழக்கு - அக்.15க்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

Update: 2019-10-04 09:39 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்யப்பட்ட ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு மனு, வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பானுமதி ரிஷிகேஷ் ராய் அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் தங்களது வாதத்தை முன் வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கை வருகிற 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததுடன் சிபிஐ தரப்பில் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்கவும் உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்