சரத்பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு - ராகுல் குற்றச்சாட்டு

சரத்பவார் மீதான நடவடிக்கை, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2019-09-27 11:39 GMT
சரத்பவார் மீதான நடவடிக்கை, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கூட்டுறவு வங்கி கடனில் மோசடி செய்ததாக கூறி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக சம்மன் ஏதுவும் அனுப்பப்படாத நிலையில், தாமாக இன்று ஆஜராவதாக அறிவித்திருந்த சரத்பவார் இன்று ஆஜராகவில்லை. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில், தற்போது சரத்பவார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ள ராகுல், இது அரசியல் சந்தர்ப்பவாதம் என்று குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்