தமிழ் அமைப்புகள் ஆர்ப்பாட்டம் : திருமாவளவன், தமிமுன் அன்சாரி பங்கேற்பு

இலங்கை பிரச்சினை தொடர்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2019-09-16 19:54 GMT
இலங்கை பிரச்சினை தொடர்பாக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில், தமிழ் அமைப்புகள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், பழ. நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, தனியரசு, திரைப்பட இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், ஈழத்தில் நடந்த போர் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு  சர்வதேச அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்