"தோல்விகளை சுட்டிக்காட்டியதால் அரசு பழிவாங்கும் நடவடிக்கை" - மோடி அரசு மீது பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

Update: 2019-08-21 11:48 GMT
ப.சிதம்பரம் மீதான சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையின் நடவடிக்கை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மத்திய அரசின் தோல்விகளை சுட்டிக்காட்டியதால் ப.சிதம்பரம் மீது பழிவாங்கும் நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசு மேற்கொண்டு உள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாட்டின் வளர்ச்சிக்காக உண்மையாக பல ஆண்டுகளாக பணியாற்றியவர் ப.சிதம்பரம் என்றும், ஆட்சியாளர்களின் தவறுகளையும், அரசின் தோல்விகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியவர் ப.சிதம்பரம் என்றும் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்