திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அமளி : மாநிலங்களவை ஒத்தி வைப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி ஒத்தி வைக்கப்பட்டது.

Update: 2019-07-09 09:08 GMT
திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி ஒத்தி வைக்கப்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு, கர்நாடக விவகாரம் குறித்து பேச வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு ஏற்கவில்லை. இதற்கிடையே, பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்கக் கூடாது என்று கோஷம் எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள், அவையின் மையப்பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அதன் காரணமாக பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்தி வைப்பதாக வெங்கய்ய நாயுடு அறிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்