மக்களின் குறைகேட்டு கர்நாடகா முதலமைச்சர் பயணம்

கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, கிராமங்களுக்கு சென்று அங்கேயே தங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.

Update: 2019-06-26 14:32 GMT
கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமி, கிராமங்களுக்கு சென்று அங்கேயே தங்கி, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார். ரெய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள கெரேகுட்டா கிராமத்திற்கு அவர் சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள ஹெர்மரஸ் அனல்மின் நிலைய ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு முதலமைச்சர் சென்ற பேருந்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரமடைந்த குமாரசாமி, "நீங்களெல்லாம் நரேந்திர மோடிக்கு வாக்களித்தீர்கள். அவருக்கு வாக்களித்தால் இதுதான் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறிவிட்டு, பயணத்தை தொடர்ந்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்