பிரதமர் மோடியின் அபிமானியால் ஏற்பட்ட அனுபவம் : சமூகவலைதளத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை

பிரதமர் மோடியின் அபிமானியால் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நடிகர் பிரகாஷ் ராஜ் தமது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Update: 2019-06-18 03:01 GMT
பிரகாஷ் ராஜ் தமது குடும்பத்துடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். குல்மார்க் என்ற பகுதியில் அவர் ஹோட்டலில் தங்கியுள்ளார். அப்போது பெண் ஒருவர் தனது மகளுடன் ஓடி வந்து பிரகாஷ் ராஜூடன் செல்பி எடுத்துள்ளனர். இதை அருகில் இருந்து பார்த்த அந்த பெண்ணின் கணவர், மோடியை விமர்சிக்கும் பிரகாஷ் ராஜிடமா புகைப்படம் எடுத்தாய்? என்று கடுமையாக திட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் அழத் தொடங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த  பிரகாஷ் ராஜ், அந்த நபரை அழைத்து தம்மையும், மோடியையும் முன்னிறுத்தியா, தாங்கள் திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கேள்வி எழுப்பியதுடன், அவர்கள் விருப்பத்திற்கும் மதிப்பளிக்குமாறு கூறியுள்ளார். இந்த சம்பவத்தை பிரகாஷ் ராஜ் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்