உழவர்களுக்கு ரூ. 6000 மானியம் - தடைகளை களைய வலியுறுத்தல்

பிரதமரின் உழவர்கள் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெறுவதில் உள்ள தடைகளை களைய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

Update: 2019-06-08 08:53 GMT
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் உழவர்களுக்கு பட்டா மாறுதல் வழங்க சிறப்பு இயக்கத்தை அரசு நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கிராம அளவில் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து உரிய ஆவணங்கள் அளிக்கும் உழவர்களுக்கு பட்டா மாறுதல் செய்து பிரதமரின் நிதி உதவித் திட்ட பயனாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்