ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்பு...விஜயவாடாவில் கோலாகல கொண்டாட்டம்

மக்களவை தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது.

Update: 2019-05-30 08:18 GMT
மக்களவை தேர்தலுடன், ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில், மொத்தம் உள்ள, 175 தொகுதிகளில், ஜெகன் மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 151 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் புதிய முதலமைச்சரின் பதவியேற்பு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், ஆயிரக்கணக்கான மக்களின் ஆரவாரத்துக்கு இடையே ஜெகன் மோகன் ரெட்டி, ஆந்திர முதலமைச்சராக பதவியேற்று கொண்டார். அவருக்கு, ஆளுநர் நரசிம்மன் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

கருணாநிதி எழுதிய புத்தகத்தை பரிசளித்த ஸ்டாலின்....



இந்த பதவியேற்பு விழாவில், தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜெகன்மோகனுக்கு, சந்திரசேகரராவ் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி எழுதிய புத்தகத்தை, ஜெகன்மோகனுக்கு பரிசாக வழங்கி வாழ்த்தினார்.

ஜெகன்மோகனுக்கு, மும்மதத்தினர் ஆசி...



இதைதொடர்ந்து, புதிய முதலமைச்சராக பதவியேற்று கொண்ட ஜெகன்மோகன் ரெட்டிக்கு, மும்மதத்தினர் ஆசி வழங்கி வாழ்த்தினர்.
Tags:    

மேலும் செய்திகள்