தேர்தலை சந்திக்க பயந்து தகுதி நீக்க நடவடிக்கை - டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

குறுக்கு வழியில் ஆட்சியை தொடர அதிமுகவினர் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2019-05-06 19:18 GMT
மக்களை சந்தித்து தேர்தல் நடத்தினால் ஆட்சியை தொடர முடியாது என்ற எண்ணத்தில் குறுக்கு வழியில் ஆட்சியை தொடர அதிமுகவினர் செயல்படுவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜை ஆதரித்து டிடிவி தினகரன்  பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக வாக்களித்த 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, இடைத்தேர்தலை சந்திக்கும் சூழ்நிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உருவாக்கிவிட்டதாக தினகரன் கூறினார்.
Tags:    

மேலும் செய்திகள்