தமிழக உரிமைகளை பறிகொடுத்து வரும் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் - தினகரன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு ஆட்சி நடத்துபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என தினகரன் கூறியுள்ளார்.

Update: 2019-05-05 21:31 GMT
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு ஆட்சி நடத்துபவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என  அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்,  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  சுந்தரராஜனை ஆதரித்து அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய தினகரன், தமிழகத்தின் நலனை பொருட்படுத்தாமல் உரிமைகளை பறிகொடுத்து வரும் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும் என்றார்.
Tags:    

மேலும் செய்திகள்