அரசுப் பள்ளியை உலகத்தரம் வாய்ந்ததாக உயர்த்துவோம் - கமல்
திருச்சி பாராளுமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஆனந்தராஜாவை ஆதரித்து திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகே அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய கமல்ஹாசன் சம்பாதிப்பதற்காக தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறினார். மேலும், தொண்டர்கள் யாரும் தனக்காக உயிரை கொடுக்க வேண்டாம் எனவும், தனக்கு வாக்களித்தால் மட்டும் போதும் என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.