துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிரசாரம் : ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக வாக்குசேகரிப்பு

முதலமைச்சராக முடியாத பொறாமையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க-வை குறைகூறி பேசிவருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

Update: 2019-04-12 08:19 GMT
முதலமைச்சராக முடியாத பொறாமையில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அ.தி.மு.க-வை குறைகூறி பேசிவருவதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் குமாரை ஆதரித்து அலங்காநல்லூரில் பிரசாரம் மேற்கொண்ட அவர், அடிமட்ட தொண்டன் உயர் பதவிக்கு வருவது தி.மு.கவில் சாத்தியமில்லை எனக் கூறினார். ஆனால், அ.தி.மு.கவில் விசுவாசம் மிக்க தொண்டர்கள், உயர் பதவிக்கு வரமுடியும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்