சென்னையில் புதைவட மின் கம்பிகள் திட்டம் விரைவில் நிறைவேற்றம் - அமைச்சர் தங்கமணி

சென்னை மாநகரம் முழுவதும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கமணி உறுதி அளித்துள்ளார்.

Update: 2019-02-13 07:19 GMT
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், தி.மு.க உறுப்பினர்கள் ராஜா, அரவிந்த் ரமேஷ் ஆகியோர் புதைவட மின்கம்பிகள் திட்டம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, தாம்பரத்தில் 443 கோடி ரூபாய் செலவில், இந்த பணிகள் தொடங்குவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றார். அதேபோல், கொளத்தூர் தொகுதி மட்டுமின்றி, சென்னை மாநகரம் முழுவதும் புதைவட மின்கம்பிகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், இதற்கு டெண்டர் விடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்