ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்

ஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-11 09:47 GMT
ஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ராமதாஸ், அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவி என்றும் ராமதாஸ் பாராட்டியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்