இடைத்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் பாஜக - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்த விடாமல் பாஜக முயற்சிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-10 16:49 GMT
அறிக்கையில் இடைத்தேர்தல் நடத்த மாட்டோம் என திரைமறைவில் முதலமைச்சர்  பழனிசாமிக்கு, மத்திய பாஜக அரசு வாக்குறுதி அளித்திருப்பதாக வரும் செய்திகள், தேர்தல் ஆணையத்தை கொச்சைப்படுத்துவதாக தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடத்த விடாமல் முதலமைச்சர் பழனிசாமி, மத்திய பா.ஜ.க அரசை நிர்ப்பந்தம் செய்வதாக வரும் செய்திகள், ஜனநாயகத்திற்கே வேட்டு வைக்கும் பயங்கரம் என்றும், திமுக தலைவர் ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். இதன் மூலம் மிக மோசமான வரலாற்றுபிழை இந்திய வரலாற்றில் எழுதப்பட்டு விடும் என, திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்