எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான் - நிர்மலா சீதாராமன்

எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-20 11:25 GMT
திருச்சியில், ராணுவ தொழிலக உற்பத்தி வழித்தட திட்டத்தை, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் கொடுத்த போதிலும், எந்த குறையும் இன்றி தமிழகத்திற்கு திட்டங்களை பிரதமர் மோடி செய்வதாக தெரிவித்தார். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்றுவது பிரதமர் மோடி தான் என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்