உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வேறு, மதநம்பிக்கை என்பது வேறு - சுரேஷ் கோபி, எம்.பி.
பாரம்பரியம், கலாச்சாரம், மத நம்பிக்கையை காப்பாற்ற இறுதி வரை போராட தயாராக உள்ளதாக நடிகரும், எம்பியுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.
சபரிமலை விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வேறு, மதநம்பிக்கை என்பது வேறு என்று தெரிவித்தார். தாங்கள் மத நம்பிக்கை உடையவர்கள் என்றும் அவர் கூறினார்.