நாட்டை உலுக்கிய புதுச்சேரி சிறுமி கொலை - வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2024-04-25 11:31 GMT

புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில், கடந்த மார்ச் 2 ஆம் தேதி, 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், சிறுமி பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு கிடைக்கப் பெற்றது. அதில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. மேலும் இந்தக் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தும், காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் சட்டத்துறைக்கு அனுப்பபட்டுள்ளதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்