காஷ்மீரில் தாக்குதல்களை நடத்தும் தீவிரவாதிகள் - எல்லை பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

எல்லையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அரங்கேறி வரும் நிலையில் வரும் 23ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2021-10-19 13:18 GMT
எல்லையில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் அரங்கேறி வரும் நிலையில் வரும் 23ம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த ஒரு வாரமாக காஷ்மீரில் வசிக்கும் 11பேரை தீவிரவாதிகள் சுட்டு கொன்றுள்ளனர். இதனால் பதற்றத்துடன் காணப்படும் காஷ்மீரில் ஏராளமான போலீசாரும், ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இன்று காலை பிரதமர் மோடியுடன் எல்லை பாதுகாப்பு குறித்து அமித்ஷா அவசர ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வரும் 23ம் தேதி அமித்ஷா காஷ்மீர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவின் பயணத்தால்  ஸ்ரீநகரில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்