ஆரியன் கானுக்கு மறுக்கப்படும் ஜாமீன் - "நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்படுவது இயல்பு"

குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்படுவது இயல்பான ஒன்று தான் என ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் மறுக்கப்படுவது குறித்து அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-11 10:26 GMT
குற்ற வழக்குகளில் நீதிமன்றத்தால் ஜாமீன் மறுக்கப்படுவது இயல்பான ஒன்று தான் என ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் மறுக்கப்படுவது குறித்து அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட ஷாருக்கானின் மகன் ஆரியன் கான் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜாமீன் வழங்க மும்பை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகவும், அதன் மீதான விசாரணை இன்று வரலாம் என அவரது வழக்கறிஞர் சதீஷ் மனிஷின்டே தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்