"ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி வழங்குங்கள்" - குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க, மூத்த வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும் என, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2021-10-02 18:26 GMT
ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க, மூத்த வழக்கறிஞர்கள் முன் வர வேண்டும் என, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தியுள்ளார். தேசிய சட்ட உதவிகள் ஆணையத்தின் சட்ட விழிப்பு பிரசார தொடக்க விழா, டெல்லி விஞ்ஞான பவனில் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய  ராம்நாத்கோவிந்த், விளிம்புநிலை மக்களுக்கும் நியாயம் கிடைக்கும் வகையில் சேவைகளை அளித்தும் வரும் தேிய சட்ட உதவிகள் ஆணையத்தின் பணிகளை பாராட்டினார். காந்தியின் கொள்கைகள் சட்டத்துறையினருக்கு இன்றும் பொருந்தும் வகையில் இருப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்