பிரதமர் மோடி பெற்ற பரிசுகள் ஏலம் - அக்.7 வரை நடைபெறும் ஏலம்

பிரதமர் மோடி பெற்ற பரிசு மற்றும் நினைவுப் பொருட்களை ஏலம் விடும் நடைமுறையை மத்திய கலாசார அமைச்சகம் தொடங்கி உள்ளது.

Update: 2021-09-18 10:21 GMT
பிரதமர் மோடி, தான் பெறும் பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு, அதன் மூலம் கிடைக்கும் நிதியை அரசின் திட்டங்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில், பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட ஆயிரத்து 330 வகையான பொருட்களை, ஏலமிட E-Auction எனப்படும் மின்னணு ஏல முறை நேற்று தொடங்கப்பட்டு உள்ளது. இந்த மின்னணு ஏலத்தில் பங்கேற்போர், இணையதளம் மூலம், அக்டோபர் 7ம் தேதி வரை பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றோர் அளித்த விளையாட்டு சாதனங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட ஏராளமானப் பொருட்கள் ஏலமிடப்பட உள்ளன. இதன் மூலம் கிடைக்கும் நிதி, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் நவாமி கங்கா திட்டத்துக்கு பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்