தென்மேற்கு பருவமழை தீவிரம் - வெள்ளத்தில் மிதக்கும் மும்பை மாநகர்

தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக, மும்பை மாநகர் வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

Update: 2021-07-16 05:27 GMT
மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கனமழை வெளுத்து வாங்குகிறது. தொடர் மழையால் மும்பை மாநகர் வெள்ளத்தில் மிதக்கிறது. காந்தி மார்க்கெட், வடலா, கிழக்கு விரைவுச்சாலை, சியன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சியன் ரயில்நிலையத்தில் தண்டவாளம் தெரியாத அளவிற்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் ரயில் சேவை பாதியில் நிறுத்தப்பட்டது.  கனமழை, வெள்ளத்தால், மும்பை மாநகர மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்