கொரோனா மரணங்கள் பதிவு - மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா மரணங்களை பதிவு செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Update: 2021-06-12 03:03 GMT
மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா மரணங்களை பதிவு செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இந்தியாவில் கொரோனா மரணங்கள் தவறாக கணக்கிடப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில், அதனை சுட்டிகாட்டி மத்திய அரசு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. கடந்த 10-ஆம் தேதி பீகாரில் கொரோனா மரணங்கள் அதிகமாக பதிவானதற்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட குளறுபடிகளே காரணமென தெரிவித்துள்ள மத்திய அரசு, வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா மரணங்களை பதிவு செய்ய வேண்டுமென கூறியுள்ளது. மேலும், வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த ஆண்டே வெளியிட்டுள்ளதாக கூறியுள்ள மத்திய அரசு, பீகாரில் குழந்தை மரணங்கள் அதிகரித்திருப்பது குறித்து மாவட்டவாரியாக விரிவான விவரங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்