இளம் பெண்ணுக்கு போன் செய்த இளைஞர் - இளைஞரை தாக்கிய பெண்ணின் சகோதரர்

ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு போன் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், அந்த இளைஞனை அறைக்கு வரவைத்து கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர்.

Update: 2021-05-14 11:15 GMT
ஆந்திராவில் இளம்பெண்ணுக்கு போன் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், அந்த இளைஞனை  அறைக்கு வரவைத்து கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். 

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிற்கு சில நாட்களுக்கு முன்பு போன் செய்து பேசி உள்ளார். இதனை கேட்ட அந்த  பெண்ணின் அண்ணன், மகேசை அருகில் உள்ள ஹோட்டல் அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து அங்கு சென்ற மகேசை, அங்கு காத்திருந்த சில இளைஞர்கள் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்