சபரிமலை பயணத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சபரிமலை செல்லும் தமிழக பக்தர்கள் கேரள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2020-11-22 04:01 GMT
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கொரோனா காரணமாக சபரிமலை பயணத்தின்போது கேரள அரசு வகுத்துள்ள நெறிமுறைகளை தமிழக பக்தர்கள் பின்பற்ற வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பக்தர்களும் சபரிமலை  இணையதளப் பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. நாள்தோறும் ஆயிரம் பக்தர்களும், வார இறுதியில் 2 ஆயிரம் பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்