அகமதாபாத்தில் 57 மணிநேரத்திற்கு ஊரடங்கு

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, 57 மணிநேரத்திற்கு கடுமையான ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-11-20 12:49 GMT
அகமதாபாத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்துள்ளது. நேற்று ஒரேநாளில் 230 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதைக் கருத்தில் கொண்டு, அங்கு இன்று இரவு 9 மணி முதல் 23ஆம் தேதி காலை 6 மணி வரை, 57 மணிநேரத்திற்கு கடுமையான ஊரடங்கு விதிகளை அமல்படுத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் கூடுதல் தலைமை செயலாளர் ராஜிவ்குமார் குப்தா, ஊரடங்கு அமலில் இருக்கும் சமயத்தில், பால் மற்றும் மருந்துக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என்றும், பொதுமக்கள் யாரும் கண்டிப்பாக வெளியில் வரக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்