"குடியுரிமை சட்டம் விரைவில் அமல்" - பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உறுதி

குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-20 05:15 GMT
குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டும் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல் குறித்து பல்வேறு சமூதாய தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய அவர் இவ்வாறு தெரிவித்தார். கொரோனா தொற்று காரணமாக குடியுரிமை சட்டத்தை அமல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், குடியுரிமை சட்ட விதிமுறைகள் விரைவில் நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வரும் எனவும் ஜே.பி.நட்டா உறுதியளித்தார்.  
Tags:    

மேலும் செய்திகள்