சுவப்னா சுரேஷ் மீது புதிய வழக்கு - திருவனந்தபுரம் சிறைக்கு மாற்ற திட்டம்

தங்க கடத்தல் வழக்கில், ஸ்வப்னா மீது, அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டமான 'காபிபோசா' சட்டப்படி, வழக்கு தொடர உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அவர் திருவனந்தபுரம் சிறைக்கு மாற்றப்படவுள்ளார்.

Update: 2020-10-12 03:05 GMT
இந்த வழக்கில், சந்தீப் நாயர் அளித்த வாக்குமூலத்தில், சுவப்னா சுரேஷின் வங்கி லாக்கரிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய், தங்கக் கடத்தலுக்காக பெற்ற கமிஷன் தொகை எனக் கூறியுள்ளார். சுவப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் மீது தற்போது காபிபோசா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள நிலையில், இருவரும் திருவனந்தபுரம் சிறைக்கு மாற்றப்பட உள்ளனர். இவ்வழக்கில் ஒரு ஆண்டுக்கு ஜாமீனில் வெளிவர முடியாது எனபதால் சுவப்னா சுரேஷ் அட்டக்குளங்கர மகளிர் சிறையிலும் சந்தீப்நாயர் பூஜப்புரா மத்திய சிறையிலும் அடைக்கப்பட உள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்