"புதுச்சேரி மதுபான பார்களில் திடீர் ஆய்வு" - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவு

புதுச்சேரி மதுபான பார்களில் திடீர் ஆய்வு செய்ய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-10-05 02:49 GMT
புதுச்சேரி மதுபான பார்களில் திடீர் ஆய்வு செய்ய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள தகவலில்,  புதுச்சேரி அரசு கொரோனா தொற்று சோதனைகளை அதிகளவில் செய்கிறது என்றும், அதேநேரம் மது அருந்தும் கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். அங்கு  விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்டறிய கலால்துறையினர் திடீர் சோதனைகள் செய்ய உத்தரவிட்டுள்ளார். சோதனையை விடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும்  அவர் வலியுறுத்தி உள்ளார். 


Tags:    

மேலும் செய்திகள்