60 நாட்களுக்கு பின்னர் தொடங்கிய படப்பிடிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி
பல்வேறு நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை மட்டும் நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.
பல்வேறு நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை மட்டும் நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது. படப்பிடிப்புகளை திறந்த வெளியில் நடத்தாமல் அரங்கத்திற்கு உள்ளேயே நடத்த வேண்டும் என்றும், படப்பிடிப்பில் அதிகபட்சமாக 20 பேர் பங்கேற்கலாம் என்றும் கர்நாடக அரசு அறிவுறுத்தி உள்ளது. சமூக இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் அரிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில அரசு பச்சைக் கொடி காட்டிய நிலையில், 60 நாட்களுக்கு பின்னர், சின்னத்திரை படப்பிடிப்புகள் தற்போது தொடங்கியுள்ளது.