புதுச்சேரி எல்லையில் தீவிர வாகன சோதனை - நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.

Update: 2020-05-26 12:43 GMT
கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.  கடலூர் - புதுச்சேரி கிழக்குக் கடற்கரைச் சாலையில் முள்ளோடை என்ற இடத்தில் புதுவை போலீசார் கடலூர் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்கின்றனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் மற்றும் மருத்துவ பணியாள்ர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் புதுவை பகுதியில் உள்ள கடலூர் மாவட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்தவர்கள் அடையாள அட்டையை வைத்திருந்தால்  உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். . இதன் காரணமாக நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
Tags:    

மேலும் செய்திகள்