கர்நாடகாவில் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு - கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடக மாநிலத்தில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Update: 2020-05-19 03:09 GMT
கர்நாடக மாநிலத்தில், வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார். தொற்று அதிகம் உள்ள பகுதிகளை தவிர அனைத்து இடங்களிலும் தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு இயக்கப்படும் என அறிவித்துள்ளார். ஒரு பேருந்தில் 30 நபர்கள் மட்டும் பயணிக்க வேண்டும் என்றும், அதே சமயம் ஆட்டோவில் 2 பேரும், டாக்ஸியில் மூன்று பேரும் பயணிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்