கொரோனா பரிசோதனையில் அலட்சியம் காட்டிய அதிகாரி : சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிய வீடியோ

ரயில் நிலையத்தில் பரிசோதனையின் போது அலட்சியமாக நடந்து கொண்ட சுகாதாரத்துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-21 18:44 GMT
நாடு முழுவதும் கொரோனா அச்சத்தால் மக்கள் கூடும் இடங்களில் சோதனை செய்வது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மாநிலம் தும்கூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் சுகாதாரத்துறை அதிகாரி நரசிம்மமூர்த்தி அலட்சியமாக நடந்து கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. 

இத்ந நிலையில் அலட்சியமாக செயல்பட்ட சுகாதாரத்துறை நரசிம்ம மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்து கர்நாடக மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்