தினக்கூலி தொழிலாளர்களுக்கு ரூ.1000 இழப்பீடு - உத்தரப்பிரதேச மாநில அரசு அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வேலையின்றி தவிக்கும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-03-21 01:46 GMT
உத்தர பிரதேசத்தில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வேலையின்றி தவிக்கும், தினக்கூலி தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க அம்மாநில பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 80 லட்சம் தொழிலாளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இவர்களில், 20 லட்சம் பேர் மாநில தொழிலாளர் துறையையும், 16 லட்சம் பேர் நகர்ப்புற வளர்ச்சி துறையையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்த இழப்பீட்டு தொகை அவர்களது வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்