"கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் இடதுசாரி ஆதிக்கம்" - பிரதமர் மோடிக்கு பல்கலை. துணைவேந்தர்கள் உட்பட 200 பேர் கடிதம்
கல்வி நிலையங்களில் மாணவர் அரசியல் என்ற போர்வையில், இடது சாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடெங்கிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர். அதில் கல்வி நிலையங்களில் மாணவ அரசியல் என்ற போர்வையில் இடதுசாரிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும், ஜாமியா முதல் ஜேஎன்யூ வரை சமீப காலமாக நடைபெற்று வரும் போராட்டங்கள், கல்வி வளாகங்களில் அதிகரித்து வரும் இடதுசாரி ஆதிக்கத்தையும், அதன் காரணமாக கல்வி சூழல் கெட்டுப்போய் இருப்பதை காட்டுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால், அன்றாட கல்வி செயல்பாடுகளும் மாணவர்களின் கல்வி கற்கும் திறனும் பாதிக்கப்படுவதாகவும் அவர்களை தடம் மாற்றி அரசியல் போராளிகளாக மாற்றும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் கடிதத்தில் கூறியுள்ளனர்.